அவள் கவிதையா?
அன்றி ஓவியமா?
அவள்- வண்ணங்களால் எழுதிய கவிதை!
வார்த்தைகளால் தழுவிய ஓவியம்!
உதிக்கின்ற செங்கதிறாள்
முகம் கொண்டாள்
செங்கதிரின் பாங்காய்
கன்னங்கள் கொண்டாள்!
கம்பனின் தமிழால்
கார் குழலினாள்
வெண்பிறை மதியாய்
புன்னைகையுடையாள் !
கோவை பழமொத்த
இதழ் கொண்டாள்!
பூவிதழிலினும் மென்மையினாள்
அழகிய எழிளினாள்!
ஓடிவரும் நீரலையில் துள்ளிவரும்
மீன்போற் தன் குட்டிகளை பாலூட்டி
காத்திடும் மீனாள்!
விழி ஒளியாள்!
அரவணை விரித்து
பாற்கடலில் துயிலெழும்
மாலின் பாற்
வெண்சங்காய் கண்டமுடையோள்!
வீசிவரும் மென்காற்று
நீரின்மேல் கொண்டாற்போல்
சுவாசம் கொண்டாள்!- அந்த
நீரின் அலைபோல்- இடையினாள்!
திருமகள் பாற் மனம் கொண்டாள்!
அள்ளி அருளிடும் கரம் கொண்டாள்!
மலைமகளின் நெஞ்சமாய் நின்றாள்!
வெண்தாமரை ஒளியாய் சுடர்வீசிட
கலைமகளின் திறன் கொண்டாள்!
முக்குலத்தோர் வாழ்த்திட பணிந்தாள்!
முத்தமிழ் கலையனைத்தும் கற்றாள்!
மும்மூர்த்தியரும் அருளிட வந்தாள்!
சேரனின் கொடியை புருவங்கள் தாங்கிட!
சோழனின் கொடியை நெஞ்சம் நினைவூட்டிட!
கலைநயம் பொங்கி- சங்கச்செந்தமிழ் மலர
பாண்டியன் கொடியை விழிகள் பொலிந்திட!
வந்தாள்- ஒரு மங்கை!
அரூவமாக!
அவள் நேரில் வருவாள்?!
உரூவமாக!
அந்த நாள்
இருமணம் இனையும்
மணநாள்!
அவளோடு பகிர்ந்திடுவேன்
உடற் பாகத்தினை!
கொடுத்திட்டேன்
இடப்பாகத்தினை!
இது அரங்கநாதனின்
பள்ளியல்ல- பற்றோடு
வரும் கலை!
இது நடந்தின்-
நான்: அர்த்தநாதன்!
அவள்
வற்றாத ஜீவநதி!!!
என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா!
28 January 2011
(The art of sharing love leading to, sharing the
whole life and dedicating the half towards it. The depiction graded with
reference to the form of Arthanareeswarar, a form of 50 Shiva and 50 Shakthi,
and the Jeeva nathi)
No comments:
Post a Comment