Saturday, September 3, 2011

விதையின் விலை!




தென்னவன் தேரது
தேர்குதிரைகளுடன் திரண்டுவர!
தென்றல் இளங்காற்றில்
மேகங்கள் அழுதோட!

தெளிந்த வானத்தில்
தென்னங்கீற்றாய்!
தேங்காய்சில் போல் மதியது
தவிழ்ந்திட- துயில்
கொண்டான் கொற்றவன்!
தமிழ் பாடும் தலைவன்!!
தமிழன்னையின் புகழ்  மைந்தன்!!!
வீரன்- விவேகன்!

மூன்றெழுத்தை  உயிரில் கொண்டோன்
தமிழுக்கு மூன்றெழுத்து
தமிழின் 'வாழ்வு'க்கு மூன்றெழுத்து
சொல்லாம் 'அகம்', 'புறம்' மூன்றெழுத்து
சொல்லின் 'பொருள்' மூன்றெழுத்து
தமிழின் பொருள் பரபிரம்மம் 'முருகு' மூன்றெழுத்து!!!

பிரம்மத்தின் 'பாசம்' மூன்றெழுத்து
பாசத்தின் அடைமொழி 'நட்பு' மூன்றெழுத்து
மோகம் கொண்ட 'காதல்' மூன்றெழுத்து
காதலார் கொண்ட 'காமம்' மூன்றெழுத்து!!!

பேரெடுத்த 'பிள்ளை' மூன்றெழுத்து
பிள்ளைபார் 'மழலை' மூன்றெழுத்து
இவையனைத்தும் காக்கும் தம்
'பெயர்உம்  மூன்றெழுத்து!!!

நாயகன் அவன் சிந்தையுள்
என்னொரு நினைவோட்டமோ?
நட்பால் ஏற்பட்ட தேற்றமோ-
அதன் தோற்றமோ?

சிம்மத்தின் சினம் கொண்ட கண்கள்
போல் உள்ள ஒலி தீபத்தில்
ஆழிமுக்கடலின் ஓர் துளி போல்
விழிகளில் வழிந்தோடியது- விழிநீர்!!

இதற்கு விலைதான் என்ன?!
விதைத்த விதைதான் என்ன?!
விலையின் விதை!
விதையின் விலை!

என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா!

04 November 2010


(The words of loneliness and the expression of Missing you)

No comments:

Post a Comment