Friday, September 2, 2011

My First poem: 'நீ' யார்?


'நீ' யார்?

பாலைவனத்தில் பூத்த ரோஜா நீ!
நெய்தல் நிலத்தில் கூவும் குயில் நீ!
காலை நேர வெண்மதி நீ!
மாலைபொழுதின் கார்முகில் நீ!

கவிஞர்களின் நாவில் வாழும் தமிழ் நீ!
ஆடற்கலையின் மாடரிசி நீ!
காப்பியங்களின் காவியம் நீ!
செம்மொழிதன் வெகுமதி நீ!

இலக்கணங்களில் இலக்கியம் நீ!
இலக்கியத்தின் இலக்கணம் நீ!
என்னுள்  பூத்த கவிதை நீ!

'நீ' யார்?!


என்றும் அன்புடன்!
மோ. மனோஜ் மண்டேலா

This is my First lyrics penned in the year 2002.


(This ‘nee’ is still a ? mark, not yet found the ! yet!!!)

2 comments: