Friday, September 23, 2011

நதியும் காதலும் ஒன்!


நதியும் காதலும் ஒன்!



காதல் நதி இது!
நதியின் காதலிது!

எரிகுளமாகி நதியோடி அன்பாய்
ஏறி மணமாகி தமிழோடி பண்பாய்
கலைகாக்க கரையடங்கி விளையாடி
நதியும் காதலும் ஒன்!

கடலாடி கடலோடி கூத்தாடி- அன்பிற்
உறவாடி உணர்வோடி கொண்டாடி- மாண்பிற்
நதியோடு விளையாடும் இலங்குயிளிரண்டும்
நதியுர் காதல் புகும்!

கலைவளர்க களையெடுக்க நதி வாழி!
தமிழ்வளர்க்க எழிளெடுக்க காதல் வாழி!
நாகரீக நதியோடி மக்கள் கூடிட
காதலுள் நதி புகும்!

சங்கம் வளர்த்து தமிழ்போற்றிய பாண்டியனும்
சுங்கமமைத்து பொருள் சேர்த்த சோழனும்
பாரளந்த திருமாலும் மருமாலும் சூழ்ந்த
காதல் வசம் பாடி!

முன்னே வந்தாள் செல்வ மங்கை
பின்னவளோ ஈசனின் நதி கங்கை
மாலின் இதய ஜாடையானாள்- சிவனோ
ஏற்றான் தலை ஜடையில்!

பரமன் காதல் மோகம் கோதை
அவள் மலர் மாலை போதை
அதை நிதம் போதி- செய்து
எழுக தினமும் காலை!

சித்திரம்பல கண்டு எழிலுற்ற சேரனும்
நித்திரம் மறந்து தவித்தது காதலில்
இதனின் போர் சூழ்ந்த மோதலில்
தேவரும் இதன் விளைவில்!

ஜீவநதியோடிய இயற்கை சொல்லும் புவியியல்
மனிதநெறி செய் சேர்க்கை அறிவியல்
எழில் கூடிட தமிழ் பெருகிட
நதியும் காதலும் ஒன்!

காதல் என்றின் நதியும் கூடும்
வாழு ஏரின் நிதியும் பெருகும்
கலாநதி அருள்நதி தயாநதி என்றும்
ஜெயாநதி உதயாநதி கருணாநதி!!!

என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா
13 September 2011


(This is an form of expressing a view of its kind termed in tamil as Silaedai (சிலேடை) coupled with the grammar of Venba. This particular couplet consists of 9 stages of explaining the same with an imaginative comparison of love to the waters. The due thanks credits to Krishnakumar Ganesan for motivating to script of this form)





No comments:

Post a Comment